கோவை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் கே.சி.கிரேஸி (நகர சுகாதார செவிலியர்), து.மகாலட்சுமி (சமுதாய அமைப்பாளர்), 13 தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் மற்றும் 33 துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, சால்வை அணிவித்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஓய்வுப் பலன்களாக ரூ.2 கோடி மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) என்.அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் கே.சி.கிரேஸி (நகர சுகாதார செவிலியர்), து.மகாலட்சுமி (சமுதாய அமைப்பாளர்), 13 தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் மற்றும் 33 துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, சால்வை அணிவித்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஓய்வுப் பலன்களாக ரூ.2 கோடி மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) என்.அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.