கோவை குனியமுத்தூரை அடுத்த பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரவாரியத்தின் சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அருகிலேயே ஆறுமுகம் வீடுகட்டினார். தற்போது, மழைக்காலம் என்பதால், அவ்வழியாக நடந்து சென்றாலே மின்சாரம் தாக்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மின்சார வாரியத்திடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என்பதால், ஆறுமுகம் தமிழ் புலிகள் கட்சியினரோடு இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு டிரான்ஸ்பார்மரை விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
