அதிமுக-வின் மூன்று குழுவினரும் பாஜக-வை ஆதரிப்பதில் மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர்- சிபிஐஎம் ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுகவில் உள்ள மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜக-வை ஆதரிப்பதில் நிலவும் போட்டியில், தமிழக மக்களின் நலனை பாதுகாக்க தவறிவிட்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, டவுன்ஹால் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கதிராமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். சம்மந்தப்பட்ட காவல்துறைனர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜிஎஸ்டி-யினால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி கார்பரேட்களுக்கு சாதகமாக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகும். 

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜகவை ஆதரிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இதில் தமிழக மக்களின் நலனை பாதுகாக்க அதிமுக ஆட்சி தவறிவிட்டது. 

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்பு பிரச்சாரமே காரணம். சிபிஎம் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சங்பரிவார் அமைப்புகளே ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். 

மேலும், பொய்யான கருத்துக்களை பரப்பி மத மோதல்களை உருவாக்க சங்பரிவார் அமைப்புகள் முயற்சித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். லோக் ஆயுக்தா மசோதாவை இயற்ற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயை பெற தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...