முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதாரத்தில் தலை சிறந்தவர் என்ற எண்ணம் கொண்டவர் - இல.கணேசன் பேட்டி

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தான் மட்டுமே பொருளாதாரத்தில் தலை சிறதவர் என்ற எண்ணம் கொண்டவர் என இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

கோவை கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்க விமானம் மூலம் வந்த பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, பா.ஜ.க அரசு அனைத்து கட்சிகளுடன் கலந்து பேசியே ஜி.எஸ்.டியினை அமல்படுத்தியது எனவும் பா.ஜ.க விற்கு பெருமை சேர்ந்து விட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  பொருளாதாரத்தில் தான்  மட்டுமே தலைசிறந்தவர் என்ற எண்ணம் கொண்டவர் எனவும்  ஜி.எஸ்.டி குறித்து விவாதிக்க விரும்பி இருந்தால் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என ஜி.எஸ்.டி குறித்து சிதம்பரம் கூறய கருத்தை விமர்சித்தார்.

மேலும், சிதம்பரம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பொதுமக்கள் போன்றவர்களின் விமர்சனங்களை, கருத்துகளை, ஆலோசனைகளை பா.ஜ.க வரவேற்பதாக தெரிவித்தார். தமிழக அரசு தற்போது ஆட்சியில் கவனம் செலுத்த துவங்கி உள்ளது என கூறியவர் கல்வி துறை சிறப்பாக செயல்பட துவங்கியது போல மற்ற துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனறார்.

அதிமுக ஆட்சி கலையும் சூழல் தமிழகத்திற்கு வரக்கூடாது என தெரிவித்தவர் தமிழகத்தில் ஆட்சி கலைய வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் எதிர்பார்ப்பு எனவும் ஆனால தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வராது எனவும் இல.ணேசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...