நீட் தேர்வு முடிவுகளின் படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும், மாநில கல்வி முறையில் படித்தவர்களுக்கு 85 சதவிகிதம் சிபிஎஸ்சி பாட பிரிவில் படித்தவர்களுக்கு 15 சதவிகிதம் என்ற சுகாதார துறையின் தற்போதைய நடவடிக்கை தவறானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இளநிலை முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வின் முடிவுகள்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மாநில கல்வி முறையில் படித்தவர்களுக்கு 85 சதவிகிதம் சிபிஎஸ்சி பாடபிரிவில் படித்தவர்களுக்கு 15 சதவிகிம் என்ற சுகாதார துறையின் தற்போதை நடவடிக்கை என்பது தவறானது. நீட் தேர்விற்கான சட்டவிதிகளை மதிக்காமல் யாரையோ திருப்திபடுத்த இந்த நடைமுறை கொண்டு வரப்படுகின்றது.
சுகாதாரதுறையின் இந்த புதிய முறை தொடர்பாக யார் வழக்கு தொடுத்தாலும் இந்த நடைமுறை தடைபடும். நீட் விதிமுறைப்படியே மாணவர்களை தேர்வு செய்யவேண்டும்.
இந்தியா முழுவதும் ஒரே விதமான வரி என்பது பாராட்டத்தக்கது. ஜிஎஸ்டி வரியால் சாதகங்கள் அதிகமே தவிர பாதகங்கள் பெரிய அளவில் இருக்காது. ஜிஎஸ்டி-யை மத்திய அரசு மக்களிடம் விளக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் தேவையின்றி ஜிஎஸ்டி வரியை பார்த்து அச்சப்படத் தேவையில்லை.
தமிழக அரசு மணலை நேரடியாக விற்பனை செய்வதாக தெரிவித்தது இதுவரை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஒரு லோடு மணல் ரூ.50 ஆயிரத்திக்கு விற்பனையாவதால் கட்டுமான தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. அரசே மணல் விற்பனையை துரிதப்படுத்தவேண்டும். ஜிஎஸ்டி வரியால் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஜிஎஸ்டி வரி விதிப்பானது எந்த தொழிலையாவது முடக்கும் என்றால் முதல் குரலாக புதிய தமிழகம் கட்சியின் குரல் இருக்கும். ஜிஎஸ்டி-யை கொள்கை ரீதியாக அனைவரும் ஏற்க வேண்டும். தரமான பொருட்களை உறுதி செய்யவும், தரமான பொருட்கள் கிடைக்கவும் இது உதவும்" என்றார்.
இதனைத்தொடர்ந்து, சட்டமன்றத்தில் திமுக தினமும் வெளிநடப்பு செய்துவருவது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு, சட்டமன்றத்தில் பேசினால் கூட பதிவு செய்யப்படாத நிலை இருந்து வருகின்றது. சட்ட சபையில் வெளிநடப்பு என்பது தவிர்க்க இயலாதது'.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இளநிலை முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வின் முடிவுகள்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மாநில கல்வி முறையில் படித்தவர்களுக்கு 85 சதவிகிதம் சிபிஎஸ்சி பாடபிரிவில் படித்தவர்களுக்கு 15 சதவிகிம் என்ற சுகாதார துறையின் தற்போதை நடவடிக்கை என்பது தவறானது. நீட் தேர்விற்கான சட்டவிதிகளை மதிக்காமல் யாரையோ திருப்திபடுத்த இந்த நடைமுறை கொண்டு வரப்படுகின்றது.
சுகாதாரதுறையின் இந்த புதிய முறை தொடர்பாக யார் வழக்கு தொடுத்தாலும் இந்த நடைமுறை தடைபடும். நீட் விதிமுறைப்படியே மாணவர்களை தேர்வு செய்யவேண்டும்.
இந்தியா முழுவதும் ஒரே விதமான வரி என்பது பாராட்டத்தக்கது. ஜிஎஸ்டி வரியால் சாதகங்கள் அதிகமே தவிர பாதகங்கள் பெரிய அளவில் இருக்காது. ஜிஎஸ்டி-யை மத்திய அரசு மக்களிடம் விளக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் தேவையின்றி ஜிஎஸ்டி வரியை பார்த்து அச்சப்படத் தேவையில்லை.
தமிழக அரசு மணலை நேரடியாக விற்பனை செய்வதாக தெரிவித்தது இதுவரை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஒரு லோடு மணல் ரூ.50 ஆயிரத்திக்கு விற்பனையாவதால் கட்டுமான தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. அரசே மணல் விற்பனையை துரிதப்படுத்தவேண்டும். ஜிஎஸ்டி வரியால் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஜிஎஸ்டி வரி விதிப்பானது எந்த தொழிலையாவது முடக்கும் என்றால் முதல் குரலாக புதிய தமிழகம் கட்சியின் குரல் இருக்கும். ஜிஎஸ்டி-யை கொள்கை ரீதியாக அனைவரும் ஏற்க வேண்டும். தரமான பொருட்களை உறுதி செய்யவும், தரமான பொருட்கள் கிடைக்கவும் இது உதவும்" என்றார்.
இதனைத்தொடர்ந்து, சட்டமன்றத்தில் திமுக தினமும் வெளிநடப்பு செய்துவருவது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு, சட்டமன்றத்தில் பேசினால் கூட பதிவு செய்யப்படாத நிலை இருந்து வருகின்றது. சட்ட சபையில் வெளிநடப்பு என்பது தவிர்க்க இயலாதது'.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.