கோவை மாவட்டம் தடாகம் அருகே யானைகள் கொண்ட கூட்டம் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று இரவு தடாகம் அருகே 15-க்கும் மேற்பட்ட யானைகள் சாலையில் முகாமிட்டன. இதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொது மக்கள் அவதியடைந்தனர்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறி 15 யானைகள் கொண்ட கூட்டம் தடாகம் பகுதிக்குள் நேற்று மாலை 8 மணி அளவில் நுழைந்தது. தடாகத்தில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்த தொட்டிகளில் அந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்தது.
பின்னர் தடாகம் சாலையின் நடுவே மெதுவாக நடந்து சென்ற யானைகளால், ஆனைகட்டி பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு யானைகள் செல்லும் வரை காத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, சுமார், 30 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த காட்டு யானைக் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
ஒரே நேரந்தில் 15-க்கும் மேற்பட்ட யானைகள் தடாகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறி 15 யானைகள் கொண்ட கூட்டம் தடாகம் பகுதிக்குள் நேற்று மாலை 8 மணி அளவில் நுழைந்தது. தடாகத்தில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்த தொட்டிகளில் அந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்தது.
பின்னர் தடாகம் சாலையின் நடுவே மெதுவாக நடந்து சென்ற யானைகளால், ஆனைகட்டி பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு யானைகள் செல்லும் வரை காத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, சுமார், 30 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த காட்டு யானைக் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
ஒரே நேரந்தில் 15-க்கும் மேற்பட்ட யானைகள் தடாகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.