நீலகிரி மாவட்டம் குன்னூரில் பொது இடத்தில் புகை பிடிப்போர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவினை பிரப்பித்தார். அதனைத்தொடர்ந்து, குன்னூர் நகராட்சி ஆணையர் சிராஜ் மற்றும் நகராட்சியின் சுகாதார துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு இந்நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.
இதில், இன்று குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
நகர நல அலுவலர் மற்றும் குன்னூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரகுனாதன், நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மால்முருகன், பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இன்று குன்னூர் பேருந்து நிலையம், சமத்துவ பூங்கா ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டு பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதில், இன்று குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
நகர நல அலுவலர் மற்றும் குன்னூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரகுனாதன், நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மால்முருகன், பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இன்று குன்னூர் பேருந்து நிலையம், சமத்துவ பூங்கா ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டு பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.