கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி கிடைந்தாகவும், சுகாதரமற்ற முறையில் செயல்படும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுபாஷ் சுந்தரம் என்ற இளைஞர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருபவர் சுபாஷ் சுந்தரம். இவர் இன்று பிற்பகல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார். சாப்பிடுவதற்கு தயிர் சேமியா ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு கொடுக்கபட்ட தயிர்சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர் இது குறித்து நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் கோவை பந்தய சாலையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து பேசிய அவர், தயிர் சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்ததும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஏற்கனவே இதே போன்று ஓரு முறை இந்த ஹோட்டலில் சாப்பிட வந்த போது சாப்பாட்டில் பூச்சி இருந்தாக கூறினார். தொடர்ச்சியாக சுகாதரமற்ற முறையில் உணவில் பூச்சிகள் இருப்பதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார். கோவையில் இயங்கி வரும் இந்த பிரபல ஹோட்டலுக்கு 10க்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பது குறிப்பிடதக்கது.