கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி கிடைந்தாகவும், சுகாதரமற்ற முறையில் செயல்படும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுபாஷ் சுந்தரம் என்ற இளைஞர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருபவர் சுபாஷ் சுந்தரம். இவர் இன்று பிற்பகல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார். சாப்பிடுவதற்கு தயிர் சேமியா ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு கொடுக்கபட்ட தயிர்சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர் இது குறித்து நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.



மேலும், அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் கோவை பந்தய சாலையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து பேசிய அவர், தயிர் சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்ததும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஏற்கனவே இதே போன்று ஓரு முறை இந்த ஹோட்டலில் சாப்பிட வந்த போது சாப்பாட்டில் பூச்சி இருந்தாக கூறினார். தொடர்ச்சியாக சுகாதரமற்ற முறையில் உணவில் பூச்சிகள் இருப்பதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார். கோவையில் இயங்கி வரும் இந்த பிரபல ஹோட்டலுக்கு 10க்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பது குறிப்பிடதக்கது.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...