பயிற்சி வகுப்பு நடத்த முறையான திட்டமிடல் இல்லை என்று கோவை அரசு மருத்துவமனை முன்பு உதவி மருத்துவர்கள் தர்ணா

பயிற்சி வகுப்புக்கு முறையான திட்டமிடல் இல்லாமல் தங்களை சிரமப்படுத்துவதாகக் கூறி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.



108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை புத்துணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு இன்றும், நாளையும் பயிற்சி வகுப்பு நடத்த கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவித்திருந்த பயிற்சி வகுப்பு மதியம் வரையில் தொடங்கப்படவில்லை. இதனால், இந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த 60-க்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தங்கும் இடத்தை கூட ஏற்பாடு செய்து தரவில்லை என்றும், போதிய அடிப்படை வசதிகள் கூட செய்து தராததால் பெண் உதவி மருத்துவர்கள் அவதியுற்றனர் என்றும் கூறி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரயில்நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்-யில் அவர்களுக்கான பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த தர்ணா போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...