கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி குறைந்தபட்ச கூலியாக நிர்ணயிக்கப்பட்ட 304 ரூபாய் வழங்கப்படுவதில்லை.
மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப் காப்பீடு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுவதில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் சுகாதார ஊழிர்களுக்கு வழங்க வேண்டிய முறையான ஊதியம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி குறைந்தபட்ச கூலியாக நிர்ணயிக்கப்பட்ட 304 ரூபாய் வழங்கப்படுவதில்லை.
மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப் காப்பீடு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுவதில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் சுகாதார ஊழிர்களுக்கு வழங்க வேண்டிய முறையான ஊதியம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.