நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் சுகாதார ஊழியர்கள் மனு

கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகராட்சியில் மலேரியா பிரிவில் பணிபுரியும் சுமார் ஆயிரம் ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி குறைந்தபட்ச கூலியாக நிர்ணயிக்கப்பட்ட 304 ரூபாய் வழங்கப்படுவதில்லை. 

மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப் காப்பீடு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுவதில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் சுகாதார ஊழிர்களுக்கு வழங்க வேண்டிய முறையான ஊதியம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...