கோவை வெள்ளலூர் பகுதியில் நுழைந்த யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது- முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டம்

கோவை மாவட்டம், மதுக்கரை, வெள்ளலூர் பகுதியில் நான்கு பேரைக் கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். கும்கி யானை மூலம் இந்த ஒற்றை யானை கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



கோவை, மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனிடையே, நேற்று இரவு போத்தனூர் கணேஷபுரம் பகுதியில் நுழைந்த அந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் விஜயகுமார் மற்றும் அவரின் மகள் காயத்ரியை (12) தாக்கியது. இதில் சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறிது நேரத்தில் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை, அங்கு நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை தாக்கியது. தொடர்ந்து, அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, வெள்ளானபாளையம் பகுதிக்குள் நுழைந்த யானை தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரை மிதித்துக் கொன்றது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் உள்ளிட்டு ஏராளமான வனத்துறையினர் முகாமிட்டனர். மேலும, இந்த காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், கலீம், கோவை சாடிவயளில் இருந்து சுஜய், பாரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 



தொடர்ந்து, கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் மற்றும், மயக்க ஊசி செலுத்தும் வனச்சரகர்கள் உள்ளிட்ட மூவரும் சுமார் 12.30 மணியளவில் யானைக்கு மயக்க ஊசியைச் செலுத்தி பிடித்தனர்.

இந்த ஒற்றை காட்டு யானையை முகாமுக்குக் கொண்டு செல்ல வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிதளவு மயக்கம் தெளிந்தவுடன் கும்கி யானைகளின் உதவியுடன் முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...