கோவை வெள்ளலூர் பகுதியில் நுழைந்த யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது- முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டம்

கோவை மாவட்டம், மதுக்கரை, வெள்ளலூர் பகுதியில் நான்கு பேரைக் கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். கும்கி யானை மூலம் இந்த ஒற்றை யானை கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



கோவை, மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனிடையே, நேற்று இரவு போத்தனூர் கணேஷபுரம் பகுதியில் நுழைந்த அந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் விஜயகுமார் மற்றும் அவரின் மகள் காயத்ரியை (12) தாக்கியது. இதில் சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறிது நேரத்தில் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை, அங்கு நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை தாக்கியது. தொடர்ந்து, அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, வெள்ளானபாளையம் பகுதிக்குள் நுழைந்த யானை தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரை மிதித்துக் கொன்றது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் உள்ளிட்டு ஏராளமான வனத்துறையினர் முகாமிட்டனர். மேலும, இந்த காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், கலீம், கோவை சாடிவயளில் இருந்து சுஜய், பாரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 



தொடர்ந்து, கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் மற்றும், மயக்க ஊசி செலுத்தும் வனச்சரகர்கள் உள்ளிட்ட மூவரும் சுமார் 12.30 மணியளவில் யானைக்கு மயக்க ஊசியைச் செலுத்தி பிடித்தனர்.

இந்த ஒற்றை காட்டு யானையை முகாமுக்குக் கொண்டு செல்ல வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிதளவு மயக்கம் தெளிந்தவுடன் கும்கி யானைகளின் உதவியுடன் முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...