தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - எம்.பி. டி.கே.ரங்கராஜன்.

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் 47 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம், கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்றது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார். 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது என்பது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டார். மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்வதை தடை விதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பல மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், இதன்மூலம் நாடு தழுவிய ஒன்றுபட்ட நடவடிக்கை எடுக்க வைக்கும் பெருமை வாய்ந்த பணியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்திய நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதிமுக பெரிய சிக்கலில் இருப்பதாகவும், தினசரி செத்து செத்து பிழைப்பதால் மத்திய பாஜக அரசிற்கு எதிராக பேச பயப்படுகிறது எனவும் அவர் கூறினார். வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி ஆரம்பிக்கலாம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அது அவரது ஜனநாயக உரிமை என அவர் தெரிவித்தார். 

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். குடியரசு தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் சோதிடம் சொல்வது புத்திச்சாலித்தனம் இல்லை என பதிலளித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...