ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

விசைத்தறி தொழிலுக்கு 2014-யில் ஆன ஒப்பந்த கூலியை கேட்டு நடைபெற்ற விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதியன்று மாவட் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுக்க வேண்டும் என்றும், இனி எக்காரணம் கொண்டும் ஒப்பந்த கூலியை குறைக்ககூடாது என்றும் ஒப்பந்த கூலியை குறைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், நான்கு வாரகாலம் கடந்தும் ஓரிரு ஜவுளி உற்பத்தியாளர்களைத் தவிர மற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் இதுவரை ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்தவில்லை. 

இதேபோல், 2014-யில் ஒப்பந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கியதால் பலகட்ட போராட்டங்களுக்கும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் பின் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு 22.2.2016-யில் கோவை, திரப்பூர் மாவட்ட அமைச்சர்கள், இரண்டு மாவட்ட ஆட்சியர்களால் அவிக்கப்பட்டது.

ஆனால், ஒருசில மாதம் மட்டம் கொடுத்துவிட்டு ஒப்பந்த கூலியை குறைத்து வழங்கியதால் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடியும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்த கூலி உயர்வு வழங்காமல் செயல்பட்டனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய கூலியை கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...