ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

விசைத்தறி தொழிலுக்கு 2014-யில் ஆன ஒப்பந்த கூலியை கேட்டு நடைபெற்ற விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதியன்று மாவட் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுக்க வேண்டும் என்றும், இனி எக்காரணம் கொண்டும் ஒப்பந்த கூலியை குறைக்ககூடாது என்றும் ஒப்பந்த கூலியை குறைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், நான்கு வாரகாலம் கடந்தும் ஓரிரு ஜவுளி உற்பத்தியாளர்களைத் தவிர மற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் இதுவரை ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்தவில்லை. 

இதேபோல், 2014-யில் ஒப்பந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கியதால் பலகட்ட போராட்டங்களுக்கும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் பின் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு 22.2.2016-யில் கோவை, திரப்பூர் மாவட்ட அமைச்சர்கள், இரண்டு மாவட்ட ஆட்சியர்களால் அவிக்கப்பட்டது.

ஆனால், ஒருசில மாதம் மட்டம் கொடுத்துவிட்டு ஒப்பந்த கூலியை குறைத்து வழங்கியதால் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடியும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்த கூலி உயர்வு வழங்காமல் செயல்பட்டனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய கூலியை கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...