ஜிஎஸ்டி வரியில் பொதுமக்களையும், வியாபாரிகளையும் தமிக அரசு சோதித்து வருகிறது- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்

ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் தமிழக அரசு பொதுமக்களையும், வியாபாரிகளையும் சோதித்துக் கொண்டு இருக்கின்றது எனவும் இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், நாளை அரசியல்வாதிகள் தான் மக்களை சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

கோவை தனியார் கூட்ட அரங்கில் ஜிஎஸ்டி சட்டத்தால் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் 42 சதவிகிதம் விலை உயர்வு ஏற்படும். இதை எதிர் கொள்ள மக்கள் தயாராக வேண்டும். இந்த வரி விதிப்பை கண்டித்து நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில் ஓட்டல் சங்கம், மருந்து வணிகர் சங்கம் ஆதரவு தர வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பினை கண்டித்து வரும் 30ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஏற்கனவே வரி விலக்கு இருந்த இஞ்சி, பூண்டு போன்றவற்றிக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. பூணூல், விபூதி, குங்குமம் போன்றவற்றிக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, நகை போன்றவற்றிக்கு விதிக்கப்படும் வரி விதிப்பினை பார்த்த பின்னர் ஜூன் 3 ம் தேதிக்கு பின்னர் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும். 

ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் மாநில அரசு பொதுமக்களையும், வியாபாரிகளையும் சோதித்துக் கொண்டு இருக்கின்றது. இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். நாளை அரசியல்வாதிகள்தான் மக்களை சந்திக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். மேலம், தற்போது தினமும் 3 கோடி லிட்டர் பால் தேவைபடுகின்றது. தரமான பால் கிடைக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசு தரும் குடிநீர் தரமல்லை என்றால் அரசுதான் பொறுப்பு. இதற்கு அமைச்சரையும், அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். பால் விற்பனையில் கலப்படம் என்றால் அதை அரசு தடை செய்ய வேண்டும். இரசாயனம் கலந்த பால் விற்பனைக்கு வருவதை ஆய்வு செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு" இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...