கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!


கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருப்பிட மருத்துவ அலுவலரை தாக்கி செல்போனை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலராக செளந்திரவேல் பணிபுரிந்து வருகின்றார்.கடந்த 11ம் தேதி காரமடையை சேர்ந்த கிட்டான் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ம் தேதி சிகிச்சை பலன் இன்றி  உயிரிழந்துள்ளார். உறவினர்கள் யாரும் உடனடியாக வராததால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கிட்டானின் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுருந்தது.



இந்நிலையில் இன்று அவரது உடலை வாங்குவதற்கு வந்த அவரது உறவினர்கள் தங்கள் உறவினரான கிட்டுசாமியின் உடலை தருமாறு கோரியுள்ளனர்.அப்பொழுது பெயரில் குழப்பம் ஏற்படவே உரிய சான்றிதழ் வாங்கி வரும்படி மருத்துவ அலுவலர் செளந்திரவேல் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து பத்திரிக்கை நிருபர் என கூறிக்கொண்டு வந்த கில்மோர் என்பவரும் அவருடன் வந்த சிலரும்,இருப்பிட மருத்துவ அதிகாரி சௌந்தரவேலுவிடம் வாக்குவாதம் செய்ததுடன்  தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன்  செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.இதனையடுத்து அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் ஒருவரை பிடித்து காவல் துறையில் ஓப்படைத்தனர்.

மேலும மருத்துவரை தாக்கி தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மருத்துவமனை ஊழியர்கள் 
100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவ அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவலர்கள் வழக்குபதிவு செய்துள்ளனர். கில்மோர் அக்னிகதிர் என்ற பெயரில் பத்திரிகை நடத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க போலிசார் தீவிர நடவடிகை எடுத்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...