பத்தாம் வகுப்பு தேர்வில் கோவை மாநகராட்சி பள்ளிகளில் 92.71 சதவிகிதம் - மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் உள்ள 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 2030 மாணவ, மாணவியர்களில் 1882 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, 92.71 தேர்ச்சி சதவிகிம் பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 2017-ல் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2030 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தோவு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் 1882 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 92.71 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.70, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.24. இது சென்ற ஆண்டு தேர்ச்சி சதவிகிதத்தைவிட 1.07 சதவீதம் அதிகமாகும்.

மேலும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி இராமலிங்கம் காலனி 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உடையாம்பாளையம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கோவில்மேடு 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செல்வபுரம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி புலியகுளம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒப்பணக்கார வீதி 99.63 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரங்கநாதபுரம் 98.53 தேர்ச்சி சதவிகிதமும் பெற்றுள்ளனர். 

அதேப்போன்று, மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.90 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி அனுப்பர்பாளையம் 97.30 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இராமகிருஷ்ணாபுரம் 96.99 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இர.ச.புரம் (மேற்கு) 96.93 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி செல்வபுரம் 96.43 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பாப்பநாயக்கன்பாளையம் 95.24 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி சித்தாபுதூர் 95 தேர்ச்சி சதவிகிதமும் பெற்றுள்ளனர்.

மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, இர.ச.புரம் 93.94 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி 92.68 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர்காலனி 92.45 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பீளமேடு 90.48 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மணியகாரன்பாளையம் 89.77 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி குப்பக்கோணாம்புதூர் 88.24 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வரதராஜபுரம் 87.50 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வடகோவை 85.37 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இரத்தினபுரி 83.85 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம் 81.82 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம் 79.45 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதூர் 73.81 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி, இர.ச.புரம் 71.43 தேர்ச்சி சதவிகிதமும் என மொத்த்தம் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 92.71 ஆகும்.

மேலும் பாடப் பிரிவுகளில் கணக்கில் 13 மாணவ, மாணவியர்களும், அறிவியலில் 21 மாணவ, மாணவியர்களும், சமூக அறிவியலில் 95 மாணவ, மாணவியர்களும் ஆகமொத்தம் 129 மாணவ, மாணவியர்கள் 100 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 2016-ல் நடைபெற்ற பொதுத் தேர்வின் பாடப் பிரிவுகளில் 41 மாணவ, மாணவியர்கள் 100 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இம்மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து, வழிநடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...