கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு குடி நீர் தட்டுப்பாடு பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உதகையில் நடைபெறவுள்ள 121 வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவும் இத்தருனத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 1519 ஏரிகளில்  குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. மேலும், 300 கோடி ரூபாய் திட்டத்தில் 2220 ஏரிகள்  தூர்வார  அரசு  நடவடிக்கை எடுத்துவருகிறது.

அடுத்த வாரத்திலேயே மேட்டூர் அணை தூர்வாரப்படும். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும்  மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயிர் காப்பீடு திட்டம் மூலம்  பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குடி நீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் வறட்சி நிவாரண நிதி வழங்கும் பட்டியலில், விடுபட்ட விவசாயிகளுக்கு நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுதப்பட்டுள்ளது'' என்றார்.

இதைத்தொடர்ந்து, இரு அணிகள் இணைவது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு , பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றார். பின்னர் சாலை மார்கமாக மலர் கண்காட்சி விழாவில் கலந்து கொள்ள  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை புறப்பட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...