கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் கார்த்தி மற்றும் மோகன்ராஜுக்கு 3 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கபட்டனர்.
கோவை:
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜ் ஆகியோர், 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற நுழைவாயில் முதல் போக்சோ நீதிமன்ற அறை வரை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜ் ஆகியோர், 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற நுழைவாயில் முதல் போக்சோ நீதிமன்ற அறை வரை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.