சூலூர் சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்; போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் கார்த்தி மற்றும் மோகன்ராஜுக்கு 3 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கபட்டனர்.


கோவை:

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜ் ஆகியோர், 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீதிமன்ற நுழைவாயில் முதல் போக்சோ நீதிமன்ற அறை வரை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...