கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (27.05.2026) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் 4 முக்கிய துணை மின் நிலையங்களில் இன்று (மே 27) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.




மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அங்கலக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளுக்கு மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.




மைலம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மைலம்பட்டி, கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், R.G.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.




சர்கார் சமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மன்னிகம்பாளையம், அக்ரஹார சமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிப்பாளையம், மொண்டிக்காளிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.




யமுனா நகர், களப்பநாயக்கன்பாளையம், G.C.D நகர், கணுவாய், K.N.G புதூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் Industries ஒரு பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன் ஆகிய இடங்களில் மின்தடை நீடிக்கும்.




அங்கலக்குறிச்சி, பொங்காலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், P.N.நூர், M.G.நூர், சோமந்துறைச்சித்தூர், N.M.சுங்கம், ஆழியாறு, நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பளப்பட்டி, சிலோன் காலனி உள்ளிட்ட பரந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.




இந்த திட்டமிட்ட மின்தடை குறித்து மின்வாரியம் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறும் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.


Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...