ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாடிக்கு 237 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ளது.
Coimbatore: ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 65.4 அடியாக பதிவாகியுள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் விளைவாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு தற்போது வினாடிக்கு 237 கன அடி அளவுக்கு நீர் வரத்து பதிவாகி வருகிறது. இந்நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 186 கன அடி அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் பாசனத்திற்காக தொடர்ந்து நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைக்கு தற்போது வினாடிக்கு 237 கன அடி அளவுக்கு நீர் வரத்து பதிவாகி வருகிறது. இந்நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 186 கன அடி அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் பாசனத்திற்காக தொடர்ந்து நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.