குடிநீர் பிரச்சனைகாக பொதுமக்கள் சாலை மறியல், பேருந்து மறியல் போன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பகுதிக்கு குடிநீர் விநியோகத் தட்டுப்பாடு நிவர்த்தி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன்  இன்று தகவல் தெரிவித்துள்ளார்.  

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில்,“கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோயம்புத்தூர் மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. குறிச்சிப் பகுதியான ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டருக்கும் பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 40 இலட்சம் லிட்டர் குடிநீரும் பெறப்பட்டு வருகிறது.

தற்பொழுது,பொள்ளாச்சி பிரதான சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் ஆழியாறு திட்டத்தின் பிரதான குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. மேலும், தலைமை நீரேற்று நிலையம் மற்றும் நீர்உந்து நிலையங்களில் மின்தடை ஏற்படுவதாலும், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு குறைவான அளவே குடிநீர் பெறப்படுகிறது.

மேலும், பில்லூர் அணைப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்து சில நேரங்களில் மின்தடை ஏற்படுவதால், குறிச்சி பகுதிக்கு குறைவான அளவே குடிநீர் பெறப்பட்டு வருகிறது. மேற்கண்ட காரணங்களால் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. 

மேலும், பருவமழை பொய்த்துநிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் மேற்கண்ட பகுதிகளில் கிணற்று நீர் விநியோகம் செய்வதிலும் சற்று காலதாமதம் ஏற்படுகிறது, அவ்வப்போது பெறப்படும் புகார்களை சரிசெய்ய உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விநியோகக் குழாய்கள் அமைத்து கிணற்று நீர் விநியோகம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயற்கையினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் சிலர் சாலை மறியல், பேருந்து மறியல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த தவறான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இவ்வளவு கடுமையான வறட்சி நிலையிலும் தமிழக அரசின் போர்கால நடவடிக்கைகளால் குனியமுத்தூர், குறிச்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...