பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் இணைந்து டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மோடி அரசு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் காரணமாக இருக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் இணைந்து கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அஜய்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சி. தங்கவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளியங்கிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. சிவசாமி, மாநில பொருளாளர் எம். ஆறுமுகம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய மோடி அரசு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் காரணமாக இருக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் இணைந்து கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அஜய்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சி. தங்கவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளியங்கிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. சிவசாமி, மாநில பொருளாளர் எம். ஆறுமுகம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.