கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலை கின்னஸ் விருது

தமிழகத்தின் கோவையில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி திருமுகச்சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை என்று  கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

இதை பற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறுவதாவது: 

"உலகிலேயே மிகப்பெரிய மார்பளவுச் சிலையின் அளவு - உயரம் 34.24 மீட்டர் 112 அடி 4 அங்குலம், அகலம் 24.99 மீட்டர் 81 அடி 11.8 அங்குலம், நீளம் 44.9 மீட்டர் 147 அடி 3.7 அங்குலம். இந்த சாதனையை தமிழ்நாட்டின் ஈஷா அறக்கட்டளை செய்ததாக 11 மார்ச் 2017 அன்று உறுதி செய்கிறோம்."

இந்த சாதனை ஈஷாவிற்குகிடைத்துள்ள இரண்டாவது கின்னஸ் சாதனை விருதாகும். ஏற்கனவே ஈஷா அறக்கட்டளை அக்டோபர் 17 2006 அன்று 852,587 மரக்கன்றுகளை, தமிழ்நாட்டில் நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் திருமுகச்சிலையை வடிவமைக்க 2.5 ஆண்டுகள்ஆனதாகவும், அதை நிர்மாணிக்க 8 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும், அதற்கு காரணம் இதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டார்களின் அர்ப்பணிப்புதான் என்றும் ஈஷாவின் நிறுவனர் சத்குரு இச்சிலை திறப்பின் போது கூறியிருந்தார்.

மக்களுக்கு ஊக்கம் ஊட்டிடும் ஒரு பிரம்மாண்ட அடையாளம் தான் இந்த முகம். மனிதர்கள் தன்னிலை மாற்றத்தை கொண்டு வரவிரும்பினால், அதற்கான தீர்வை தங்களுக்குள்ளேயே தேடி உணர்ந்திட ஆதியோகி ஒரு அடையாளமாக, குறியீடாக இருந்து ஊக்குவித்திட அமைந்துள்ளார். முதல் யோகியான ஆதியோகி, மனிதனின் தன்னிலை மாற்றத்திற்கான 112 வழிமுறைகளை வழங்கினார். அதன் குறியீடாகவே 112 அடி உயரச்சிலை அமைந்துள்ளது.

யோகபாரம்பரியத்தில் சிவனையோக விஞ்ஞானத்தின் மூலமான முதல் யோகியாக குருவாக பார்க்கின்றனர். இதை போன்று மேலும் மூன்று 112 அடி முகங்கள் இந்தியாவின் மூன்று மூலைகளில் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...