கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்கு பிறகு தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Coimbatore: தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 466 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அவர், தவெக-வின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார். தற்போது, சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையத்தில் தொடங்கி சித்ரா, காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, துடியலூர், ஜி.என்.மில்ஸ், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், கணுவாய், தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக பெரியநாயக்கன்பாளையம் வரை பொதுமக்களை சந்தித்து வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தனது வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் தேவைகளுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என உறுதியளித்தார்.


Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...