தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்திருந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

“நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் மக்கள் சக்தியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்ற எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கையான SIIR பணியின் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், போதைப் பொருள் பரவல், பெண்கள் மற்றும் பட்டியல் சமூகங்களுக்கு எதிரான செயல்கள், கோவில் இடிப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதுவே தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாகவும் கூறினார்.

மேலும், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் இந்து முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்த அவர், “விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்,” என்றார்.

அதேபோல், பிற மாநிலங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.விற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அரசியல் சாசனத்தின்படி நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...