குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி புகார் அளித்துள்ளார். விஜய்யின் பேச்சைக் கேட்ட குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம் பிடித்துத் தனக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு, குழந்தைகளின் உளவியலைப் பாதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Coimbatore கணபதி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன், Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் இது தொடர்பாக ஒரு புகார் மனுவை இன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், "விஜய்யின் பேச்சைக் கேட்ட எனது 5 வயது மகன், அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று என்னிடம் அடம்பிடித்தான். நான் மறுப்பு தெரிவித்தபோது, அவன் உணவைத் தவிர்த்து அழுதுகொண்டே பிடிவாதம் பிடித்தான்" என்று தெரிவித்துள்ளார்.

"இறுதியில், தமிழக வெற்றிக் கழகத்திற்குத்தான் ஓட்டு போட்டேன் என்று எனது மகனிடம் பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. 'விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்' என அவன் அழுது வருவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது" என்று பாலகிருஷ்ணன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் பிஞ்சு மனதில் இத்தகைய எண்ணங்களை விதைப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய தூண்டுதலில் ஈடுபட்ட விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விஜய் பேசிய அந்த வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் பாலகிருஷ்ணன் தனது மனுவில் எச்சரித்துள்ளார். விஜய்யின் இந்தப் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...