கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருவதாக தகவல்.
கோவை: கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன், கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஆரமுதன், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரவிந்த், தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவா ரோஹித், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த மணிபாலு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணையில், விடுதியில் தங்கி படித்து வந்த அமுதன் உள்ளிட்ட 9 மாணவர்கள் கடந்த 9-ம் தேதி முகமூடி அணிந்து நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று செல்போன்களை திருடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செல்போன் திருட்டு சம்பவத்தில் அமுதனை அடையாளம் கண்ட மாணவர்கள் அவரை தாக்கியதில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் தொடர்பாக அமுதன் புகார் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி வருவதாகவும், இந்தக் கொலை போதைப்பொருள் தொடர்பானது அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் சுமார் 20 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன், கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஆரமுதன், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரவிந்த், தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவா ரோஹித், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த மணிபாலு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணையில், விடுதியில் தங்கி படித்து வந்த அமுதன் உள்ளிட்ட 9 மாணவர்கள் கடந்த 9-ம் தேதி முகமூடி அணிந்து நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று செல்போன்களை திருடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செல்போன் திருட்டு சம்பவத்தில் அமுதனை அடையாளம் கண்ட மாணவர்கள் அவரை தாக்கியதில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் தொடர்பாக அமுதன் புகார் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி வருவதாகவும், இந்தக் கொலை போதைப்பொருள் தொடர்பானது அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் சுமார் 20 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 மாணவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.