குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி புகார் அளித்துள்ளார். விஜய்யின் பேச்சைக் கேட்ட குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம் பிடித்துத் தனக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு, குழந்தைகளின் உளவியலைப் பாதிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Coimbatore கணபதி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன், Coimbatore மாநகர காவல் ஆணையரிடம் இது தொடர்பாக ஒரு புகார் மனுவை இன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், "விஜய்யின் பேச்சைக் கேட்ட எனது 5 வயது மகன், அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று என்னிடம் அடம்பிடித்தான். நான் மறுப்பு தெரிவித்தபோது, அவன் உணவைத் தவிர்த்து அழுதுகொண்டே பிடிவாதம் பிடித்தான்" என்று தெரிவித்துள்ளார்.

"இறுதியில், தமிழக வெற்றிக் கழகத்திற்குத்தான் ஓட்டு போட்டேன் என்று எனது மகனிடம் பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. 'விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்' என அவன் அழுது வருவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது" என்று பாலகிருஷ்ணன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் பிஞ்சு மனதில் இத்தகைய எண்ணங்களை விதைப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய தூண்டுதலில் ஈடுபட்ட விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விஜய் பேசிய அந்த வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் பாலகிருஷ்ணன் தனது மனுவில் எச்சரித்துள்ளார். விஜய்யின் இந்தப் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...