கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனல் நிறுவனருமான செந்தில்வேல் பிரச்சாரம் மேற்கொண்டு, திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதியின் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.



அதற்கு முன்பாக, பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூப் சேனலின் நிறுவனருமான செந்தில்வேல், திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முன்னணி மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பெண்களுக்காக இந்த ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் ஆரோக்கியத்தை பாதுகாக்க கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை வழங்கி பெண்களின் பொருளாதார நிலை உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார்.



மேலும், “எதிர்க்கட்சிகளிடம் மக்களுக்காக செய்த சாதனைகள் எதுவும் இல்லாததால் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணியில் அனைத்து முடிவுகளையும் பாஜகவே எடுக்கிறது. தமிழ்நாட்டில் சாதி, மத அரசியலை கொண்டு வர முயற்சிக்கின்றனர்,” என குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...