தொண்டாமுத்தூர் தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தொண்டாமுத்தூர் ரவி தீவிர பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொண்டாமுத்தூர் ரவி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


Coimbatore: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று தீவிர தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இப்பரப்புரையில் தொண்டபுத்தூர் ரவி முன்னின்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து பேசினார்.










ஆர்.எஸ்.புரம் பகுதி கழகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த பரப்புரையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக பங்கேற்றனர். வேட்பாளர் N.R.கார்த்திகேயனின் சார்பாக வாக்காளர்களிடம் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.










இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றியம், பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், தேர்தல் பொறுப்பாளர்கள், BLA2, BLC, BDA போன்ற பிரிவுகளின் உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.










மகளிர் அணியினர், கழகத்தின் மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக இந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இப்பரப்புரையின்போது வாக்காளர்களிடம் தொண்டாமுத்தூர் தொகுதியின் வளர்ச்சி குறித்தும், கூட்டணியின் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...