தொண்டாமுத்தூர் தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தொண்டாமுத்தூர் ரவி தீவிர பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொண்டாமுத்தூர் ரவி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


Coimbatore: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று தீவிர தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இப்பரப்புரையில் தொண்டபுத்தூர் ரவி முன்னின்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து பேசினார்.










ஆர்.எஸ்.புரம் பகுதி கழகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த பரப்புரையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக பங்கேற்றனர். வேட்பாளர் N.R.கார்த்திகேயனின் சார்பாக வாக்காளர்களிடம் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.










இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றியம், பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், தேர்தல் பொறுப்பாளர்கள், BLA2, BLC, BDA போன்ற பிரிவுகளின் உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.










மகளிர் அணியினர், கழகத்தின் மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக இந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இப்பரப்புரையின்போது வாக்காளர்களிடம் தொண்டாமுத்தூர் தொகுதியின் வளர்ச்சி குறித்தும், கூட்டணியின் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...