தொண்டாமுத்தூர் தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தொண்டாமுத்தூர் ரவி தீவிர பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொண்டாமுத்தூர் ரவி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


Coimbatore: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று தீவிர தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இப்பரப்புரையில் தொண்டபுத்தூர் ரவி முன்னின்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து பேசினார்.










ஆர்.எஸ்.புரம் பகுதி கழகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த பரப்புரையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக பங்கேற்றனர். வேட்பாளர் N.R.கார்த்திகேயனின் சார்பாக வாக்காளர்களிடம் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.










இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றியம், பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், தேர்தல் பொறுப்பாளர்கள், BLA2, BLC, BDA போன்ற பிரிவுகளின் உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.










மகளிர் அணியினர், கழகத்தின் மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக இந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இப்பரப்புரையின்போது வாக்காளர்களிடம் தொண்டாமுத்தூர் தொகுதியின் வளர்ச்சி குறித்தும், கூட்டணியின் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...