கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்றும் மும்பைக்கு 4 விமானங்கள் இயங்குகின்றன. சர்வதேச இணைப்புகள், வசதியான இருக்கைகள் மற்றும் சூடான உணவு வசதிகளை காரணம் காட்டி சென்னை, பூனே உள்ளிட்ட நகரங்களுக்கு சேவைகள் தொடங்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோருகின்றனர்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள், வசதியான இருக்கைகள், சூடான உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏர் இந்தியா வழங்குவதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பின் இயக்குனர் சதீஷ் இதுகுறித்து கூறும்போது, "ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் நிர்வகிக்க தொடங்கிய நாள் முதல் அந்நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது" என்றார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏர் இந்தியா சார்பில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.






மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக சதீஷ் தெரிவித்தார். குறிப்பாக பெரும்பாலும் குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவது, தூய்மை, சூடான பலவகை உணவுகள் பரிமாறப்படுவது, மிகவும் வசதியான இருக்கைகள், பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள் வழங்கப்படுவது உள்ளிட்டவை ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ளன என்று அவர் விளக்கினார்.




ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கொண்டுள்ளதால் உதாரணமாக கோவையில் இருந்து டெல்லிக்கு சென்றால் அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவையை பெற முடியும். ஒருமுறை கோவையில் பயணிகள் தங்களது உடைமைகளை செக்இன் செய்தால் போதும், டெல்லி சென்று மீண்டும் அங்கிருந்து எந்த வெளிநாட்டுக்கு செல்கிறாரோ அந்த விமான நிலையத்தில் சென்று தனது உடமையை பெற்றுக் கொள்ளலாம்.




இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்று சதீஷ் தெரிவித்தார்.




கோவை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும், சென்னை, பூனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கவும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




"இதுகுறித்த கோரிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் வழங்கியுள்ளோம். விரைவில் புதிய சேவைகள் தொடங்கப்படும் என நம்புகிறோம்" என்று சதீஷ் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...