கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளிலும் நீர் வரத்து தொடர்கிறது. மார்ச் 31 நிலவரப்படி அணைகளின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் வெளியேற்று விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.






ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் தற்போது 65.7 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 467 கன அடி நீர் வரத்து உள்ளது. அதே நேரத்தில், அணையில் இருந்து வினாடிக்கு 393 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. இதனால் தற்போது 52.2 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 40 கன அடி நீர் வரத்து இருந்தாலும், அணையில் இருந்து வினாடிக்கு 1,150 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.






வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் தற்போது 3.21 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் தற்போது 37.37 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






அதேபோல், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் தற்போது 42.11 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 618 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 195 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மழை நீர் வரத்து தொடர்வதால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், விவசாயிகளுக்கு தொடர்ந்து நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...