கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயணித்தனர். 48 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்திலும் சேவைகள் தொடர்ந்தன என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Coimbatore: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் நிலவிய நிலையிலும், கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட விமான சேவைகளில் 4,880 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், 48 டன் எடை கொண்ட சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவைகள் மார்ச் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. கோவையிலிருந்து அபுதாபிக்கு ரத்து செய்யப்பட்ட சேவைகள் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மார்ச் 9-ம் தேதி ஒரு நாள் கோவை-ஷார்ஜா இடையே ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 12-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தொடர்ந்து விமான சேவைகள் வழங்கப்பட்டன.
போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் மார்ச் மாதத்தில் 16 நாட்கள் இயக்கப்பட்ட விமானங்களில் மொத்தம் 4,880 பேர் பயணித்துள்ளனர். 48 டன் எடை கொண்ட சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறை விமானம் இயக்கப்படும்போதும் 160 பயணிகள் கோவை வந்து சேர்ந்தனர். அதேபோல் 140 பயணிகள் கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட்டுச் சென்றனர். மேலும், ஒவ்வொரு முறை விமானம் இயக்கப்பட்டபோதும் 3 டன் எடை கொண்ட சரக்குகள் விமானங்களில் கொண்டு செல்லப்பட்டன.
ஏப்ரல் மாதத்திலும் கோவை-ஷார்ஜா இடையே விமான சேவைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், ஈரான்-இஸ்ரேல் போர் சூழல் மோசமடைந்தால் திடீரென சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை சர்வதேச விமான நிலையம் மேற்கு தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு முக்கிய வான் போக்குவரத்து மையமாக செயல்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கான விமான இணைப்புகள் இப்பகுதியில் வசிக்கும் வெளிநாடு வேலைக்கு செல்பவர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...