கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளிலும் நீர் வரத்து தொடர்கிறது. மார்ச் 31 நிலவரப்படி அணைகளின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் வெளியேற்று விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.






ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் தற்போது 65.7 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 467 கன அடி நீர் வரத்து உள்ளது. அதே நேரத்தில், அணையில் இருந்து வினாடிக்கு 393 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. இதனால் தற்போது 52.2 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 40 கன அடி நீர் வரத்து இருந்தாலும், அணையில் இருந்து வினாடிக்கு 1,150 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.






வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் தற்போது 3.21 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் தற்போது 37.37 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






அதேபோல், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் தற்போது 42.11 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 618 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 195 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மழை நீர் வரத்து தொடர்வதால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், விவசாயிகளுக்கு தொடர்ந்து நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...