மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC, VMC இயந்திர Hour Rate கட்டணங்களை 15-30 சதவீதம் உயர்த்த TAGCT, CODMA தொழில் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றின. உற்பத்தி நிறுவனங்கள் கட்டணத்தை ₹300-ல் இருந்து ₹130 வரை குறைத்ததால் தொழில் முனைவோர் பாதிப்பு.


Coimbatore: மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து 'டாக்ட்' தொழில் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, கோவையில் 'ஜாப் ஒர்க்'செய்யும் தொழில் முனைவோர் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான குறுந்தொழில் முனைவோர் 'சிஎன்சி', 'விஎம்சி' இயந்திரங்களை வங்கிகளில் கடன் மூலம் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அனைவருக்கும் 'ஜாப் ஒர்க்'கிடைக்காத சூழ்நிலையை பயன்படுத்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் 'சிஎன்சி' இயந்திரங்களுக்கு Hour Rateகட்டணத்தை 300 ரூபாய்க்கு 130 ரூபாய் வரை கட்டணத்தை குறைத்து கொடுப்பதால் 'ஜாப் ஒர்க்' செய்யும் தொழில் முனைவோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர் 'ஜாப் ஒர்க்' தொழில் முனைவோருக்கு உரிய முறையில் இயந்திர கட்டணத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். இது தொடர்பாக எங்கள் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



'காட்மா' தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறும்போது, மூலப் பொருட்களை விலை உயர்வு, வரி அதிகம் செலுத்துதல், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வாடகை அதிகம் நிர்ணயிக்கப்படுவது,தொழிலார்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் குறுந்தொழில் முனைவோருக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஜாப் ஒர்க்' அடிப்படையில் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் லாபம் இல்லாத நிலையில் செயல்பட்டு வரும் அவல நிலை காணப்படுகிறது.

எனவே 'ஜாப் ஒர்க்' தொழில் நிறுவனங்கள் இயந்திரங்களுக்கான 'Hour Rate' 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தினால் மட்டுமே தொழிலில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் அலுவலகத்தில் நடந்தகூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 

மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...