ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், மெட்ரோபோலிஸ் இணைந்து "கலாச்சாரம் காக்க ஒரு வரலாற்று கருத்தரங்கு"


மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கொண்ட இந்திய நாட்டின் வளமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அவற்றை பாராட்டி பாதுகாக்கவும், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், மெட்ரோபோலிஸ் இணைந்து கலாச்சாரம் காக்க ஒரு வரலாற்று கருத்தரங்கினை நடத்த திட்டமிட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த ஆண்டு பல்லவர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராண்டிரகூடர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் பற்றிய இரண்டு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால வரலாறு இதில் இடம்பெறுகிறது.

இந்த கால கட்டத்தில் தென்னிந்தியா முழுவதையும் அண்ட பேரரசுகள், கோவில் கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் சமுதாய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இது பற்றிய கருத்தரங்கு கோவை எஸ்என்ஆர் கல்லூரி கருத்தரங்கில் வரும் மே12 மற்றும் 13ம் தேதிகளில் இரண்டு நாள் கருத்தரங்குகளாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளன. 13 அமர்வுகளாக நடக்க உள்ள இதில், பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று படத்தொகுப்பு விளக்கங்கள் அளிக்கவுள்ளனர்.

மேலும் டாக்டர் ஆர்.நாகசாமி தலைமை ஏற்கும் இந்த நிகழ்வில், புனேயில் சிறந்த கல்வியாளரான டாக்டர் யு.டெக்லுர்கர், மைசுரிலிருந்து எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விஜயவாடாவிலிருந்து டாக்டர் இ.சிவநாகி ரெட்டி மற்றும் முனைவர் சித்ரா மாதவன், முனைவர் வெங்கட்ராமன், முனைவர் டி.சத்தியமுர்த்தி, பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த கருத்தரங்கில் பொதுமக்களும் பங்கேற்று மகிழ்ச்சியடையலாம். சிறிய அளவிலான தொகை, மதிய உணவுக்கும் செலுத்த வேண்டும். இரண்டு நாள் நடக்கும் இந்த கருத்தரங்கில், மாணவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் வந்தால் இலவசமாக பங்கேற்கலாம். இந்த நிகழ்வு சீக்சியா அமைப்பின் ஆதரவுடன் நடக்கிறது. இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9842251510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...