கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Coimbatore: 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், 10 லட்சம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.










கழக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம், கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.








முதல்வர் M. K. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இளைஞர் அணியின் செயல்பாடுகள் மற்றும் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் செயல்படுத்துதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.








இந்நிகழ்வில், செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் கே. இ. பிரகாஷ் எம்.பி, மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...