கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Coimbatore: 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், 10 லட்சம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.










கழக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம், கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.








முதல்வர் M. K. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இளைஞர் அணியின் செயல்பாடுகள் மற்றும் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் செயல்படுத்துதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.








இந்நிகழ்வில், செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் கே. இ. பிரகாஷ் எம்.பி, மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...