பி.என்.புதூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்; வே.கௌதம்குமார் நினைவஞ்சலி

கோவை பி.என்.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 22-ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள பி.என்.புதூரில் விடுதலைப் போராட்ட மாவீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவராக பணியாற்றிய வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் சனிக்கிழமை (மார்ச் 22) சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவஞ்சலி நிகழ்வில், விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.







நிகழ்ச்சிக்கு பி.என்.புதூர் கிளையைச் சேர்ந்த விதாத் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக பணியாற்றிய தோழர் வே.கௌதம்குமார் 2024-ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். சிகிச்சையில் இருந்தபோதிலும் பலனளிக்காததால் மார்ச் 22-ல் அகால மரணமடைந்தார்.







விடுதலைப் போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் பிறந்து, அதே மாவீரன் தூக்கிலிடப்பட்ட நாளில் உயிரிழந்த தோழர் கௌதம்குமார், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கிய அவரது தியாக உணர்வு பலரை உந்துதல் அளித்துள்ளது.

1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ல் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த இவர்களின் தியாகம் இன்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...