பி.என்.புதூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்; வே.கௌதம்குமார் நினைவஞ்சலி

கோவை பி.என்.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 22-ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள பி.என்.புதூரில் விடுதலைப் போராட்ட மாவீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவராக பணியாற்றிய வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் சனிக்கிழமை (மார்ச் 22) சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவஞ்சலி நிகழ்வில், விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.







நிகழ்ச்சிக்கு பி.என்.புதூர் கிளையைச் சேர்ந்த விதாத் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக பணியாற்றிய தோழர் வே.கௌதம்குமார் 2024-ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். சிகிச்சையில் இருந்தபோதிலும் பலனளிக்காததால் மார்ச் 22-ல் அகால மரணமடைந்தார்.







விடுதலைப் போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் பிறந்து, அதே மாவீரன் தூக்கிலிடப்பட்ட நாளில் உயிரிழந்த தோழர் கௌதம்குமார், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கிய அவரது தியாக உணர்வு பலரை உந்துதல் அளித்துள்ளது.

1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ல் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த இவர்களின் தியாகம் இன்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...