சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது: பணிக்கு திரும்ப உடன்பாடு

சாம்சங் தொழிற்சாலையில் 09.09.2024 முதல் நடந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அரசு தலையீட்டால் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப ஒப்புக்கொண்டனர்.



சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 முதல் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் விளைவாக, சாம்சங் நிர்வாகம் தொழிலாளர்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்தது. தொடர்ந்து, 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

1. தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

2. நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

3. பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

4. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளுக்கு நிர்வாகம் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் விரைவில் பணிக்குத் திரும்ப உள்ளனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...