சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது: பணிக்கு திரும்ப உடன்பாடு

சாம்சங் தொழிற்சாலையில் 09.09.2024 முதல் நடந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அரசு தலையீட்டால் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப ஒப்புக்கொண்டனர்.



சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 முதல் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் விளைவாக, சாம்சங் நிர்வாகம் தொழிலாளர்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்தது. தொடர்ந்து, 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

1. தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

2. நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

3. பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

4. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளுக்கு நிர்வாகம் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் விரைவில் பணிக்குத் திரும்ப உள்ளனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...