கோவை மாநகராட்சி ஆணையர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, சோமசுந்தரம் மில் சாலை, அவிநாசி மேம்பாலம், சங்கனூர் ஓடை மற்றும் போத்தனூர் பிரதான சாலை பகுதிகளில் குப்பை அகற்றுதல், மழைநீர் வெளியேற்றம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



மத்திய மண்டலத்தில் உள்ள சோமசுந்தரம் மில் சாலை பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்ட ஆணையர், பணியை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.





அவிநாசி மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.







கிழக்கு மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர், கள்ளிமடை, கதிரவன் கார்டன், இரயில்வே மேம்பாலம் அருகில் அமைந்துள்ள சங்கனூர் ஓடை செல்லும் நீர்வழித்தடத்தை பார்வையிட்ட ஆணையர், நீர்வழித்தடத்திலுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



தெற்கு மண்டலத்தில் உள்ள போத்தனூர் பிரதான சாலை பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...