கோவை மாநகராட்சி ஆணையர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, சோமசுந்தரம் மில் சாலை, அவிநாசி மேம்பாலம், சங்கனூர் ஓடை மற்றும் போத்தனூர் பிரதான சாலை பகுதிகளில் குப்பை அகற்றுதல், மழைநீர் வெளியேற்றம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



மத்திய மண்டலத்தில் உள்ள சோமசுந்தரம் மில் சாலை பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்ட ஆணையர், பணியை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.





அவிநாசி மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.







கிழக்கு மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர், கள்ளிமடை, கதிரவன் கார்டன், இரயில்வே மேம்பாலம் அருகில் அமைந்துள்ள சங்கனூர் ஓடை செல்லும் நீர்வழித்தடத்தை பார்வையிட்ட ஆணையர், நீர்வழித்தடத்திலுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



தெற்கு மண்டலத்தில் உள்ள போத்தனூர் பிரதான சாலை பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...